Friday 27 February 2015

Cartoon Sankaran Pillai

once sankaran pillai fell into a ditch.,it was difficult to come out,even after trying many times, 
He Shouted " fire.... " fire...
People around him urged and called the fire service.,they rescued sankaran pillai.,
People asked sankaran pillai,..,,u shouted "Fire...., "fire..,Where is that Fire?
Sankaran pillai replied if i shout "ditch... ditch.,nobody will come.,so i shouted Fire.., Fire..

If you do what is needed in that moment, then you will get help automatically...


Or else you will not get any help...


Sadhguru : From the book Athanaikum asai padu.





உங்கள் மனம் நிலையில்லாமல் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது . அதனால், உடலின் வேகம் குறைந்துவிடிகிறது, 
இப்படித்தான் சங்கரன் பிள்ளையின் வாழ்கையில் ஒரு வேடிக்கை நடந்தது.

'ஒரு வேலையை ,மாலையில் வீட்டுக்குப் போனதும் மறக்காமல் செய்ய வேண்டும்'என்று கைக்குட்டையில் அவர் முடிச்சு போட்டுக்கொண்டார்.


ஆனால் வீட்டுக்குப் போனதும் எதற்க்காக அந்த முடிச்சைப் போட்டோம் என்பது அவருக்குச் சுத்தமாக மறந்துவிட்டது.
பட்பட்ப்பானார்.மூளையை கசக்கினார்.மொட்டைமாடியில் உலாதினார்.நெற்றியில் தட்டிக்கொண்டார்.நோட்டில் என்னென்னவோ கிறுக்கினார்.உஹஊம் ...,நினிவுக்கு வரேவே இல்லை.

பேசாமல் படுத்துத் தூங்குங்கள்.எதுவாருந்தாலும் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம். என்று மனைவி அறிவுரை சொன்னார்.
'மாட்டேன். எதோ முக்கியமான விஷயமாயிருக்கும்.அதை கண்டுபிடிக்காமல் எப்படி தூங்குவது?என்று படுக்கையில் உட்கார்ந்தே இருந்தார்.

இதுவா..... அதுவா.....என மண்டைக்குள் நூரோயிரம் யோசனைகள் பூச்சிகள் போல் பரந்தன்.கடைய்சியில் இரவு இரண்டு மணிக்கு சலித்துப்போய் கைக்குட்டையைத் தூர எறிந்தார்.சடகேன்று ஞாமகம் வந்தது.

இன்றைக்கு ஒன்பது மணிக்கே தூங்கப்போக வேண்டும்' என்று நினைவுப்படுதிகொள்ளப் போடப்பட முடிச்சு அது!
படபடப்பாக மூளையை இயங்கவிட்டால், சங்கரன்பில்லைக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும்.

அத்தனைக்கும் ஆசைப்படு புத்தகம்: சத்குரு

Man’s Freedom

Sadhguru says, “”I can do what I like”… is freedom and “I can only do what I like” is not freedom but bondage”


Once Shankaran Pillai went to the bar with his friends and when the clock struck 8 pm, he put down his half-full glass and started walking towards the door.

All his friends were asking him to at least finish the glass and go, but he kept walking. His friends said, “We know why you are walking out, you are afraid of your wife. What are you? Are you a man or mouse?”

Shankaran Pillai turned back, kept his hands on his hips, stared at them and said, “I am the Man in my house, if I was a Mouse my wife would be afraid of me” :))

He walked slowly thinking of what to say to his wife and when he reached home, his wife was waiting for him at the door steps with a roller-pin.

She shouted, “You fool, can’t you come on time before 8 pm, you have started drinking again…”. Shankaran Pillai went slowly and closer to her and took a sudden leap over her and started running inside the house.

He is a small and fragile guy, he had lots of hope that she could not catch her. He started running all over the house and went to the bedroom. He went under the bed and there he lied down with his hands at the back of the head.

His wife is a bit hefty so she can’t get under the bed. She said, “You fool come out of the bed, you coward…”.

Shankaran Pillai replied, “I am the Man of the House and I can lie down wherever I wish” :))

This is his freedom and that is the same way how Man is behaving now…

Freedom is not living without rules but freedom is living by following rules grin emoticon

- Excerpts from Sadhguru’s talks

Sadhguru says, you can see sankaran pillai in front of ur mirror. 
ஒரு முறை சங்கரன் பிள்ளை மகனுக்கு கடுமையான காய்ச்சல் .டாக்டர் வந்தார். இது தோற்று நோய் கிருமியால் வந்திருக்கும் காய்ச்சல். ஏற்கனவே ,இதை எவளவு பேருக்கு உங்கள் மகன் பரப்பிவிட்டனோ ? இனி உடம்பு சரியாகும்வரை பள்ளிக்கு போக வேண்டாம்'என்று எச்சரித்தார். சிகிச்சை சில நாட்கள் தொடர்ந்தது.

மகனுக்கு ஒருவழியாகக் காய்ச்சல் குறைந்து குனமாகிவிடான்.

டாக்டர் பிள்ளை நீட்டினர்.

தொகையைப் பார்த்து சங்கரன் பிள்ளை சண்டைக்குப் போய் விட்டார்.

டாக்டர் விளக்கம் கொடுத்தார்.' ஒன்பது முறை ,உங்கள் வீட்டுக்கே வந்து ஊசி போட்டிருக்கேன் .அதுவும் விலை உயர்ந்த மருந்து!"

சங்கரன் பிள்ளை கொதித்தார்.

"விளையாடுகிறீர்களா? என் மகன் ஊரெலாம் காய்ச்சலைப் பரப்பியதால் தானே உங்கள் பிஸ்னெஸ் படு ஜோராகப் போய் கொண்டு இருக்கிறது. என்னிடம் எப்படி பணம் கேட்பீர்கள்? நியாயமாக நீங்கள் அல்லவா எனக்கு பணம் தரவேண்டும்?"

இப்படி தான் எது கிடைத்தாலும் ,அதனால் ஆதாயம் உண்டா , அதை வைத்துக்கொண்டு எப்படியாவது உலகத்துப் பணத்தையெல்லாம் சுருட்டித் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளமுடிய்மா என்று பேராசை கொண்டு பலர் அலைகிறார்கள்.

சத்குரு: அத்தனைக்கும் ஆசை படு புத்தகம்.


ஒரு முறை மூச்சி முட்டக் குடித்து விட்டு சங்கரன் பிள்ளை பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார்.வந்த பஸ்ஸில் கூட்டம் பிதுங்கி வழிந்தது.எப்படியோ முண்டியடித்து அதில் ஏறிவிட்டார்.பத்து பதினைந்து பேர் காலை மிதித்து,நான்கைந்து பேரை முழங்கையால் நெட்டி தள்ளி உள்ளே நகர்ந்தார்.

ஒரு மூதாட்டி பக்கத்து இருக்கையில் இருந்தவர் ஏளுந்திருபதை பார்த்ததும்,சங்கரன் பிள்ளை பலரையும் இடித்து தள்ளி பாய்ந்தார்.குடி கரனோடு மல்லுக்கு நிற்க வேண்டாமே என்று அவர்கள் முகசுளிபுடன் ஒதுங்கி வலி விட்டார்கள் .சங்கரன் பிள்ளை பெருமிதத்துடன் அந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தார்.உட்கார்ந்த வேகத்தில் அந்த மூதாட்டி மீது சரிந்தார் . அவள் மடியில் வைத்திருந்த பழக்கூடை உருண்டோடியது .கோபத்தோடு அவரை பார்த்த மூதாட்டி.,நீ நேர நரகத்துக்கு தான் போய் சேரப் போகிறாய் என்று ஆத்திரத்தோடு சொன்னார்.
சங்கரன் பிள்ளை பதறியடித்து எழுந்தார்.ஹோல்டன்.ஹோல்டன்,வண்டியை நிறுத்துங்கள்.நான் போக வேண்டியது காந்தி நகருக்கு .தப்பான வண்டியில் ஏறிவிட்டேன் ' என்று கத்தினர்.

உங்களில் பலர் இப்படி தான் எந்த பஸ்ஸில் ஏறி இருக்கோம் என்பதே தெரியாமல் ஏறுவதும் இறங்குவதுமாக அல்லாடி கொண்டு இருகிறீர்கள்.

சத்குரு: அத்தனைக்கும் ஆசைப்படு புத்தகம்



நிறைய சலுகைகள் கிடைக்கும் என்று சொன்னார்களே ! என்று சங்கரன் பிள்ளை ராணுவத்தில் சேர்ந்தார்.தவறுதலாக இரண்டு நம்பர் சிறிய அளவு பூட்சுகள் அவருக்கு கொடுக்கப்பட்டன .தினமும் அவற்றுக்குள் கால்களை நுழைக்கும்போது ,விரல்கள் எல்லாம் ஒன்றன் மீது ஒன்று ஏறி கொள்ளும். நாள் பூராவும் அந்த சிறிய பூட்ஸ்களை கழற்றாமல் ,அவர் பாதங்கள் வழியில் தவிக்கும். வேதனை தாங்காமல் சங்கரன் பிள்ளை ஊருக்கெல்லாம் சாபம் கொடுத்து இருப்பார்.
அதிகாரிகளிடம் விஷத்தை சொன்னால்,உடனே சரியான அளவு பூட்ஸ்களை கொடுப்பார்களே நண்பா... ஏன் இப்படி அவஸ்தை படுகிறாய்? என்று சக சிப்பாயி கேட்டார்.
சங்கரன் பிள்ளை இடம் இருந்து கடுப்பாக பதில் வந்தது.நீ தான் பார்கிராயே ,தினந்தோறும் எவளவு கடுமையான பயிற்சிகள்...எலும்பு எல்லாம் இற்றுப் போகும் அளவுக்கு அடுத்தடுத்து வேலைகள். எதிலாவது சந்தோசம் கிடைகிறதா? ராத்திரி இந்த பூட்ஸ்களை கழற்றி போட்டதும் அப்படா என்று எப்பேர்ப்பட்ட சந்தோசம் கிடைகிறது ? ராணுவத்தில் சேர்ந்ததில் எனக்கு கிடைக்கும் அந்த ஒரே சந்தோசத்தையும் இழக்க சொல்கிறாய?
நெஞ்சத்தை தொட்டு சொல்லுங்கள்.. சங்கரன் பிள்ளை போல் சந்தோசத்தையே பணயம் வைத்து விட்டு .,எபோதடா பூட்சுகளை கலுற்றுவோம் என்று உங்களுக்கும் தவிப்பு வந்திருகிறதா இல்லையா?
அத்தனைக்கும் ஆசைப்படு : சத்குரு
ஒரு முறை, பல நாள் பயணமாக சங்கரன்பிள்ளை வெளியூர் சென்றிருந்தார். அப்போது காலை உணவு சாப்பிட ஒரு ஹோட்டலுக்குச் சென்றார். “சார், என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார் சர்வர்.

அதற்கு சங்கரன்பிள்ளை, “ஆறிப் போய், காய்ந்த இரண்டு இட்லி, அப்புறம் உப்புச் சப்பு இல்லாத சட்னி” என்றார். சர்வருக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் மீண்டும் பணிவுடன், “சார், இட்லி நல்ல சூடா, மென்மையாவே கொடுக்கிறோம், அதுவும் இப்போதே கொடுக்கிறோம், காத்திருக்கக்கூட வேண்டாம், எங்கள் ஹோட்டல் சட்னியும் டேஸ்ட்டா இருக்கும், உப்பும் அளவாத்தான் இருக்கும்,“ என்றார்.

சங்கரன் பிள்ளையும் உடனே, “தயவுசெய்து நான் கேட்டபடி கொடுங்கள், நான் வேண்டுமானால் காத்திருக்கிறேன்,” என்றார். உடனே சர்வரும் எப்படியோ சமாளித்து காய்ந்த இட்லிகளையும் உப்பில்லாத சட்னியையும் கொண்டுவந்து பரிமாறி விட்டு “சார் வேறு ஏதாவது…” என்று மிகவும் தயக்கத்துடன் கேட்டார். “ஆறிப்போன காப்பி ஒண்ணு கொடு” என்றார் சங்கரன் பிள்ளை.

சர்வருக்கு மயக்கமே வந்துவிட்டது. அதையும் சமாளித்துப் பரிமாறிவிட்டு, பில் கொடுக்கும்போது, “சார், தப்பா நினைக்காதீங்க, ஏன் சார் இப்படிச் சாப்பிடுறீங்க?” என்று கேட்டார்.

உடனே சங்கரன் பிள்ளை சொன்னார்: “இன்று எங்கள் திருமண நாள்… என் மனைவி ஞாபகம் வந்துவிட்டது… அதான்..


No comments:

Post a Comment